Friday, July 13, 2018

கமலஹாசன் என்னும் ஐயங்காரின் சாதி ஒழிப்பு ஐடியா! சில மாதங்களுக்கு முன்னே அம்பேத்கர் - பெரியார் வாசகர் வட்டத் திறப்பு விழா ஒன்றின் இறுதியில் ஒரு இளைஞர் கேட்ட கேள்வி இது: "நான் ஒரு தலித், நான் இட ஒதுக்கீட்டிலோ, அரசு கொடுத்த ஸ்காலர்ஷிப்பிலோ படிக்கவில்லை. அதனால் நான் இட ஒதுக்கீட்டில் படிக்காதவன், அரசின் உதவித்தொகைகளைப் பெறாதவன் என்று இந்த அரசாங்கம் எனக்குத் தனியாக ஒரு சான்றிதழ் கொடுக்குமா?" என்று கேட்டான். அவன் கேட்டதின் பின்னணியில் உள்ள வலி உங்களுக்குப் புரியாமல் போனால், அந்தக் கேள்வியில் உள்ள சமூகத்தின் குரூரத்தனம் உங்களுக்கு பிடிபடாமல் போனால், உங்களால் ஒருக்காலும் இந்தியச் சமூகத்தைப் புரிந்துக்கொள்ளவே முடியாது. "இட ஒதுக்கீடு பெறுகிறேன், ஸ்காலர்ஷிப் பெறுகிறேன் என்கிற காரணத்தில்தானே இந்தச் சமூகம் என்னை ஒடுக்குகிறது? நான் அதையெல்லாம் விட்டொழிக்கத் தயாராகி விட்டேன், இனியாவது என்னை சாதிய ரீதியாக அணுகாதீர்கள்" என்கிற கோரிக்கையைத்தான் அவன் இந்த சமூகத்தின் முன் வைக்கிறான், கமல்ஹாசன்தான் இந்தியச் சமூகத்தின் சாதிய அடையாளங்களையும் குறியீடுகளையும் மூலதனமாக்கி, சாதியத்தை மேலும் நியாயப்படுத்தும், கூர்மைப்படுத்தும் போக்கைத் தனது வணிக சினிமாவில் காலம் காலமாகச் செய்துவருகிறார். ஆனால், முற்போக்காளன் என்னும் போர்வையில். சாதியை ஒழித்துக்கொண்டே "சபாஷ் நாயுடு" என்கிறார். நேரடியான சாதி வெறியர்களைக் காட்டிலும், கமல்ஹாசனைப் போன்ற போலி சமத்துவவாதிகள் ஆபத்தானவர்கள். இவர்கள் கொலையாளிகள் அல்ல; தற்கொலையைத் தூண்டுபவர்கள்.


வாசுகி பாஸ்கர்

"என் தந்தை பாலய்யா" ஒய்.பி.சத்தியநாராயணனால் எழுதப்பட்ட புத்தகம். தன் தந்தை பாலய்யாவின் வாழ்க்கை வரலாற்றைப் பேசும் கதை. தலித் சமூகத்தை சேர்ந்த பாலய்யா, தனக்குக் கிடைக்காமல்போன கல்வி வாய்ப்பைத் தன் பிள்ளைகளுக்கு ஏற்படுத்திக் கொடுத்து, முதல் தலைமுறை கரையேற்றப்படும் சிக்கல்களையும் வலிகளையும் தனது வரலாற்றிலிருந்து தொகுத்த நூல்.

அதில் ஒரு நிகழ்வு. நூலாசிரியரும் பாலய்யாவின் மகனுமான சத்யா கல்லூரியில் படிக்கும்போது தலைமையாசிரியர் ஒருமுறை அழைத்திருப்பார். கால்பந்தாட்டப் போட்டியில் பங்குபெற்றுக் கல்லூரி சார்பாக வெற்றி பெற்றிருந்ததனால் பாராட்டுவதற்கான அழைப்பு அது. சத்யாவும் போயிருக்கிறார், தலைமையாசிரியர் சத்தியாவைப் பாராட்டிவிட்டு "உனக்கு நிறைய திறமை இருக்கு, நல்லா படிக்கவும் செய்யுற, அதனால உன் பெயரை சத்தியாவுல இருந்து சத்தியநாராயணா என்று நான் மாற்றப்போறேன், சத்தியா என்று இருந்தால் அது உன் எதிர்காலத்தை பாதிக்கும், நான் உன் அப்பாவிடம் இது குறித்து பேசுகிறேன்" என்று சொல்லி, அதற்குப் பிறகு சத்தியா என்பவர் சத்தியநாராயணா என்று பெயர் மாற்றப்பட்டார்.

"யா" என்று முடியும் பெயர்களை ஆந்திராவின் அன்றைய சமூகத்து ஆதிக்கச் சாதி இந்துக்கள் சூட்டுவதில்லை, சத்யா என்றாலே அது தலித் சமூகத்துப் பெயராகத்தான் இருக்குமென்கிற வழக்கம் அங்கே இருந்திருக்கிறது, அதன் பொருட்டே சத்யா என்னும் பெயர் பார்ப்பனத் தன்மையைக் கொண்டுள்ள சத்திய நாராயணா என்று மாற்றப்பட்டுள்ளது.

சாதியச் சமூகத்தின் சிக்கலான அமைப்பு

இதுதான் இந்திய சாதியச் சமூகத்தின் உண்மை முகம். இங்கே உடையிலிருந்து உணவு வரை, பிறப்பிலிருந்து பெயர் வரை எல்லாமே சாதியம். இந்தியச் சாதி அமைப்பின் சிக்கல்களை அதன் பிடியிலிருந்தே புரிந்துகொள்வது அத்தனை சுலபமான காரியமல்ல. இந்தியாவில் அண்ணல் அம்பேத்கரைத் தவிர சாதியத்தின் கூறுகளை வரலாற்றிலிருந்து ஆராய்ந்து, நடைமுறைச் சமூகத்தோடு பொருத்திச் சாதியத்தை விளக்கியவர் வேறு யாருமில்லை. அதனால்தான் அண்ணல் அம்பேத்கரை "என் தலைவர்" என்றார் தந்தை பெரியார்.

ஒரே மாதிரியான உச்சரிப்பைக் கொண்ட "சத்யா" என்னும் பெயருக்கும் "சத்தியநாராயணா" என்னும் பெயருக்குமிடையிலான வேறுபாட்டைச் சாதிய ரீதியாக அர்த்தம் கற்பித்துக்கொள்ளும் நுட்பமான அமைப்பாகச் சாதியம் இருப்பதால்தான் "சாதிக்கென்று எந்த உருவமும் இல்லை, அது ஒரு மனநிலை" என்கிறார் அண்ணல் அம்பேத்கர். இப்படியான சாதிய அமைப்பிலிருந்துதான் சாதிச் சான்றிதழை ஒழித்தால் சாதி ஒழியும் என்கிற கருத்தை நேரம் கிடைக்கும்போதெல்லாம் சொல்லிவருகிறார் சாதி ஒழிப்புப் போராளி கமல்ஹாசன்.

பூணுல் துறந்த பார்ப்பன முற்போக்காளராகத் தன்னை காண்பித்துக்கொள்ளும் கமல்ஹாசன் தன் தந்தையின் பெயரைச் சொல்லும்போதுகூட "ஸ்ரீனிவாச ஐயங்கார்" என்று சொல்லத் தவறியதில்லை. சாதி வேண்டாம் சாதி வேண்டாம் என்று தனக்குத் தானே ஆயிரம் முறை சொல்லிக்கொண்டாலும் கூட, கமல்ஹாசன் உச்சரிக்கும் அந்த ஐயங்கார் என்னும் ஒரு வார்த்தை இந்தச் சமூகத்தில் ஏற்படுத்தும் தாக்கம் அவருக்கான மொத்த வரலாற்றையும் சுமந்து வரும். என் பிள்ளைகளுக்கு நான் சாதியத்தைக் கற்பித்ததில்லை என்று பெருமையாகச் சொல்லிக்கொள்ளும் அதே வேளையில் "நான் ஒரு ஐயங்கார் பெண்" என்று சொல்லிக்கொள்கிறார் அவரது மகள் ஸ்ருதிஹாசன். இதுதான் கமல்ஹாசன் சாதியத்தை ஒழித்த லட்சணம். இது கமல்ஹாசனை மட்டுமே சாடும் பதிவல்ல. இந்த மேட்டுக்குடி மனநிலையோடு சாதி ஒழிப்பைப் பேசும் போக்கினால் விளையப்போகும் ஆபத்தை விளக்கும் பதிவு.

சாதியென்பது கருவறையிலிருந்து கல்லறை வரை இருக்கிறது, பண்பாட்டில் இருக்கிறது, கலாச்சாரம் என்று சொல்லப்படும் இந்திய வழமைகளில் இருக்கிறது, குடும்பச் சடங்குகளில் இருக்கிறது, திருமணச் சடங்குகளில் இருக்கிறது, பெண்கள் அணியும் தாலியில் இருக்கிறது, ஊராகவும் சேரியாகவும் இருக்கிறது, பார்ப்பன அக்ரஹாரத் தெருக்களில் இருக்கிறது, கோவிலில் இருக்கிறது, இந்தியர்கள் உலகின் எந்தெந்தப் பகுதிக்கெல்லாம் இடம் பெயர்கிறார்களோ அங்கெல்லாம் இருக்கிறது.

.

இங்கிலாந்து அனுபவம்

இங்கிலாந்தில் வசிக்கும் இந்தியர்கள் சக இந்தியரால் சாதிய ரீதியான ஒடுக்குமுறைக்கு ஆளாவதாகப் புகார் தெரிவித்திருந்தனர், ஆரம்பத்தில் இந்தப் புகார்கள் பெரிய அளவில் கண்டுகொள்ளப்படவில்லை. பின் தொடர் குற்றச்சாட்டுகளைத் தொடர்ந்து இங்கிலாந்து அரசு கவனத்தில் கொள்ள ஆரம்பித்தது. Committee for the elimination of Racial Discrimination (CERD ) பரிந்துரையின்படி 9 (5 ) a Equality Act பிரிவில் இதற்கு உடனடியாக நடவடிக்கை எடுக்கும்படி 2010இல் ஒரு உத்தரவு பிறப்பித்தது. ஆனால் மேற்கொண்டு எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாமல் கேள்விக்குள்ளானபோது அரசுத் தரப்பில் நீதிமன்றத்துக்கு சொல்லப்பட்ட பதில்: "Caste is Complex and hard to define" (சாதி என்பது சிக்கலானது, வரையறுப்பதற்குக் கடினமானது).

பின்னாளில் சாதிய ரீதியான ஒடுக்குமுறைகள் குறித்து ஆய்வு நடத்தியபோது பணியிடங்களில் மட்டுமே 10 % சாதிய ரீதியான அடக்குமுறைகள் நடந்தது தெரியவந்தது, அங்குள்ள சாதி இந்துக்கள் இந்த வழக்கை இங்கிலாந்து அரசு எடுத்துக்கொள்ளக் கூடாது என்று இந்து அமைப்புகள் மூலம் அழுத்தம் கொடுத்திருக்கின்றனர்.

ஆம், "சாதி என்பது சிக்கலானது, வரையறுப்பதற்குக் கடினமானது". சாதியைக் கண்டறிவதும் விளக்குவதும் அத்தனை சுலபமான காரியமல்ல, இந்தியச் சமூகத்துக்கே அந்த தடுமாற்றம் இருக்கும்போது இங்கிலாந்து அரசு தடுமாறியதில் ஆச்சரியமில்லை. ஆனால்; சாதி ரீதியான இட ஒதுக்கீடும் சான்றிதழும் இல்லாத இங்கிலாந்து மண்ணில் எப்படிச் சாதியம் குடியேறியது? சாதி அடக்குமுறைகள் இருக்கிறது? என்று கமல்ஹாசனால் விளக்க முடியுமா?

சான்றிதழுக்கும் சாதிக்கும் என்ன தொடர்பு?

கமல்ஹாசன் என்னும் தனிநபரை மையப்படுத்தி எழுந்த கேள்விகளும் விளக்கங்களும் அல்ல இவை. சாதியம் எங்கெங்கெல்லாம் இருக்கிறதோ, அதையெல்லாம் பத்திரமாகப் பூட்டி, சாதிக்கு எந்தவொரு அடியும் கீறலும் ஏற்படாமல் சாதியை ஒழிக்கச் சொல்லப்படும் வழிமுறைகள்தான் இடஒதுக்கீட்டை ஒழிப்பதும், சாதிச் சான்றிதழை ஒழிப்பதும். சாதிச் சான்றிதழ் இல்லாமலேயே "தான் ஒரு ஐயங்கார் வீட்டுப் பெண்" என்று சொல்லிக்கொள்ளும் கமல்ஹாசனின் மகளைப் போல, வீட்டிலிருக்கும் சாதி ஒழியவே ஒழியாது என்பதனை உறுதியாய் தெரிந்துக்கொண்டுதான் அதற்கான வழிகளைச் சொல்கிறார்கள் கமல்ஹாசனைப் போன்ற சாதியொழிப்புப் போராளிகள்.

சாதிச் சான்றிதழுக்கும் சாதிக்கும் தொடர்பிருப்பதாக இவர்கள் செய்யும் இந்தத் தொடர் பொய்ப் பிரச்சாரத்தினால் சமூகத்தில் ஏற்படுத்திய தாக்கத்தைக் குறைவாக மதிப்பிட்டுவிட முடியாது. சில மாதங்களுக்கு முன்னே அம்பேத்கர் - பெரியார் வாசகர் வட்டத் திறப்பு விழா ஒன்றின் இறுதியில் ஒரு இளைஞர் கேட்ட கேள்வி இது: "நான் ஒரு தலித், நான் இட ஒதுக்கீட்டிலோ, அரசு கொடுத்த ஸ்காலர்ஷிப்பிலோ படிக்கவில்லை. அதனால் நான் இட ஒதுக்கீட்டில் படிக்காதவன், அரசின் உதவித்தொகைகளைப் பெறாதவன் என்று இந்த அரசாங்கம் எனக்குத் தனியாக ஒரு சான்றிதழ் கொடுக்குமா?" என்று கேட்டான்.

அவன் கேட்டதின் பின்னணியில் உள்ள வலி உங்களுக்குப் புரியாமல் போனால், அந்தக் கேள்வியில் உள்ள சமூகத்தின் குரூரத்தனம் உங்களுக்கு பிடிபடாமல் போனால், உங்களால் ஒருக்காலும் இந்தியச் சமூகத்தைப் புரிந்துக்கொள்ளவே முடியாது. "இட ஒதுக்கீடு பெறுகிறேன், ஸ்காலர்ஷிப் பெறுகிறேன் என்கிற காரணத்தில்தானே இந்தச் சமூகம் என்னை ஒடுக்குகிறது? நான் அதையெல்லாம் விட்டொழிக்கத் தயாராகி விட்டேன், இனியாவது என்னை சாதிய ரீதியாக அணுகாதீர்கள்" என்கிற கோரிக்கையைத்தான் அவன் இந்த சமூகத்தின் முன் வைக்கிறான்,

இந்த மனநிலையைத்தான் "சாதியத்திற்கும் சான்றிதழுக்கும் இடஒதுக்கீட்டிற்கும்" தொடர்புள்ளது என்னும் பிரச்சாரத்தின் மூலம் வெற்றிகரமாக ஏற்படுத்தியிருக்கிறார்கள். இட ஒதுக்கீடு என்பது கல்வியிலும் பணியிலும் விகிதாச்சார ரீதியாக அனைத்துச் சமூகத்தவரும் பரவலாக எல்லா இடங்களிலும் பிரதிநிதித்துவம் பெற வேண்டுமென்கிற ஒரு குறைந்தபட்ச ஏற்பாடு. அதன் மூலம் ஆண்டாண்டு காலமாய் இந்த மண்ணில் உரிமைகளை இழந்த சமூகத்தினர் அந்த உரிமைகளைப் பெறுவதற்கான வாய்ப்புகளை ஏற்படுத்தித்தர வேண்டும். அதற்கு அந்தச் சமூகத்தினரை அடையாளம் கண்டறிந்து அவர்களை அடையாளப்படுத்த வேண்டும். அதற்கு ஒரு சான்று வேண்டும். அந்தச் சான்றே சான்றிதழ்.

இந்தச் சான்றிதழ் கல்விக்கும் பணிக்கும் தேவைப்படும் காலத்தைத் தவிர வீட்டுப் பெட்டியில் பத்திரமாக உறங்கிக்கொண்டிருக்கும். தான் இந்தச் சாதியை சேர்ந்தவன் என்பதை நிரூபிக்க யார் மார்பிலும் தோள்பட்டையிலும் சாதிச் சான்றிதழ் பூணுலைப் போலத் தொங்கிக்கொண்டிருப்பதில்லை. அப்படியிருக்க, சாதிச் சான்றிதழை ஒழிப்பதால் எப்படிச் சாதி ஒழியும்? சாதிச் சான்றிதழை ஒழித்தால் இட ஒதுக்கீடுதான் ஒழியும். இந்தக் கருத்தை விதைப்பதன் மூலம் மறைமுகமாக இதில் ஒளிந்திருக்கும் செய்தியும் அதுதான்.

அரசியல் பிரவேசம் எடுத்து இந்த நாட்டைத் திருத்திவிடப்போவதாகக் கிளம்பியிருக்கும் கமல்ஹாசனுக்கு இந்தச் சமூகத்தின் விளிம்பு நிலை மக்களின் அடிப்படைப் பிரச்சினைகள் தெரியுமா? அது குறித்து அறிய ஆர்வப்பட்டிருக்கிறாரா? சாதிச் சான்றிதழை ஒழித்தால் சாதி ஒழியும் என்று கமல்ஹாசன் சொன்ன அதே மாதத்தில்தான், சாதிச் சான்றிதழ் கிடைக்காமல் கல்வியைத் தொடர முடியாமல் வாழ்க்கையை இழந்த பல இருளர் சமூக மக்கள் திண்டிவனத்திலிருந்து சென்னைக்கு நடைப்பயணமாகச் சென்று போராடப்போவதாக அறிவித்திருக்கிறார்கள்.

குறைந்தபட்ச வரலாற்றைச் சொல்ல வேண்டுமானாலும்கூட, இது ஒரு நாற்பதாண்டு காலப் போராட்ட வரலாறு. இந்திய அரசும் மாநில அரசும் எத்தனையோ சட்டங்களையும் அரசாணைகளையும் நீதிமன்றத் தீர்ப்புகளையும் வழங்கிய நிலையிலும், இங்கே சாதிச் சான்றிதழ் கிடைக்காமல் வாழ்க்கை கேள்விக்குறியாகும் மாணவர்களை எண்ணிக்கையில் அடக்க முடியாது.

போராட வேண்டிய களம் எது?

மாறாக, சாதியை இந்தச் சமூகத்திலிருந்து உண்மையிலேயே விரட்ட வேண்டுமானால், பண்பாட்டுத் தளம் முழுவதும் பரவிக் கிடக்கும் சாதியத்தைக் கடுமையான சட்டங்கள் கொண்டு சீர்படுத்த வேண்டும். சில அபூர்வமான மரங்களின் வேர்கள் பல மைல்களுக்கு அப்பால் பூமிக்கடியில் பரவிக் கிடப்பதைப் போல இந்தியச் சாதி அமைப்பானது நாம் கற்பனையே செய்து பார்த்திட முடியாத அளவு படர்ந்து விரிந்து வலுவாய் இருக்கிறது. அந்தச் சாதியைச் சட்டத்திற்கு முன் விரோதமாக்க வேண்டும். அதன் கிளைகளைக் கண்டறிந்து வேரோடு அழிக்க வேண்டும். இவையெல்லாம் இந்தியச் சமூகத்தில் சாத்தியமா?

சாத்தியமா என்பதைவிட, சாத்தியப்படுத்தப் போவதேயில்லை. ஏனினில் நாம் முன்னமே சொன்னதைப்போல சாதியானது நம்பிக்கை, கடவுள், கலாச்சாரம், பண்பாடு என்று எங்கும் இருக்கிறது. இந்து திருமணச் சட்டத் திருத்தத்திற்கே இங்கிருந்து ரயிலேறிப் போய் டில்லியில் கண்டனம் தெரிவித்துவிட்டு வந்த சமூகத்தில் இவை அரங்கேறுவதற்கான எந்தச் சாத்தியக்கூறும் இல்லை. அதனால்தான் ஒடுக்கிறவனோடு சண்டையிடுவதைக் காட்டிலும், ஒடுக்கப்படுகிறவனின் வளர்ச்சியைக் கருத்தில் கொள்ள ஆரம்பித்தார்கள் இம்மண்ணின் புரட்சியாளர்கள். அதன் விளைவாக உருவானவைதான் இடஒதுக்கீடும் சாதிச் சான்றிதழ்களும்.

முற்போக்குத் தளத்தில் தன்னைப் பகுத்தறிவுவாதியாக, அறிவுஜீவியாக நிலைநிறுத்திக்கொண்ட கமல்ஹாசனுக்கு இந்தியச் சமூகத்தைக் குறித்த வரலாற்றுப் பார்வையும் கிடையாது, நடைமுறைச் சமூகத்தின் சிக்கல்களும் புரியாது என்கிற உண்மையை விளங்கிக்கொள்ள வேண்டும். இதே கமல்ஹாசன்தான் இந்தியச் சமூகத்தின் சாதிய அடையாளங்களையும் குறியீடுகளையும் மூலதனமாக்கி, சாதியத்தை மேலும் நியாயப்படுத்தும், கூர்மைப்படுத்தும் போக்கைத் தனது வணிக சினிமாவில் காலம் காலமாகச் செய்துவருகிறார். ஆனால், முற்போக்காளன் என்னும் போர்வையில். சாதியை ஒழித்துக்கொண்டே "சபாஷ் நாயுடு" என்கிறார்.

நேரடியான சாதி வெறியர்களைக் காட்டிலும், கமல்ஹாசனைப் போன்ற போலி சமத்துவவாதிகள் ஆபத்தானவர்கள். இவர்கள் கொலையாளிகள் அல்ல; தற்கொலையைத் தூண்டுபவர்கள்.

Thursday, May 17, 2018

உள்ளே பதவியேற்பு; வெளியே போராட்டங்கள்!


கர்நாடக முதல்வராக இன்று காலை எடியூரப்பா பதவி ஏற்ற நிலையில், இதனைக் கண்டித்து காங்கிரஸ், மஜத கட்சியினர் தீவிரமான போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

கர்நாடகாவில் ஆட்சியமைக்க யாருக்கும் பெரும்பான்மை கிடைக்காத நிலையில், 104 எம்.எல்.ஏ.க்களைக் கொண்ட பாஜக சட்டமன்றக் கட்சித் தலைவர் எடியூரப்பா நேற்று காலை ஆளுநரை சந்தித்து ஆட்சியமைக்க உரிமை கோரினார். மாலையில் மஜத தலைவர் குமாரசாமி காங்கிரஸ், மஜதவின் 117 எம்.எல்.ஏ.க்கள் கையெழுத்திட்ட ஆதரவுக் கடிதத்துடன் ஆளுநரைச் சந்தித்து ஆட்சியமைக்க உரிமை கோரினார். ஆனால் நேற்றிரவு எடியூரப்பாவை ஆட்சியமைக்க அழைப்பு விடுத்தார் ஆளுநர் வஜுபாய் வாலா.

இதனை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் காங்கிரஸ்-மஜத தொடர்ந்த வழக்கு அவசர வழக்காக நேற்றிரவே விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. ஆனால் எடியூரப்பாவின் பதவியேற்புக்குத் தடை விதிக்க நீதிமன்றம் மறுத்துவிட்டது.

பதவியேற்றார் எடியூரப்பா

பரபரப்பான சூழ்நிலையில் ஆளுநர் மாளிகையில் இன்று (மே 17) நடைபெற்ற நிகழ்ச்சியில் கர்நாடக முதல்வராக எடியூரப்பா பதவியேற்றார் . அவருக்கு ஆளுநர் வஜுபாய் வாலா பதவிப் பிரமாணமும் ரகசியக் காப்புப் பிரமாணமும் செய்துவைத்தார். இதனைத் தொடர்ந்து எடியூரப்பா முதல் கையெழுத்தாக ரூ.56 ஆயிரம் கோடி அளவுக்கு விவசாயக் கடன்களைத் தள்ளுபடி செய்யும் கோப்பில் கையெழுத்திட்டார். இதன் மூலம் ரூ.1 லட்சம் வரை விவசாய கடன் பெற்றவர்களின் கடன் தள்ளுபடி செய்யப்படும். விழாவில் அமைச்சர்களாக யாரும் பதவி ஏற்கவில்லை. பிரதமர் மோடி, பாஜக தேசியத் தலைவர் அமித் ஷா உள்ளிட்ட தலைவர்களும் கலந்துகொள்ளவில்லை.சரியாக காலை 9-9.05மணிக்குள் பதவியேற்பு நிகழ்வு முடிந்துவிட்டது.

இதனைத் தொடர்ந்து பலத்த பாதுகாப்புடன் தலைமைச் செயலகத்திற்கு வந்த எடியூரப்பா தனது பணிகளைத் தொடங்கினார். 

பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், "அரசியல் சட்டத்துக்கு உட்பட்டு நான் முதல்வராகப் பதவியேற்றுள்ளேன். நான் முதல்வர் ஆவதற்குத்தான் கர்நாடக மக்கள் வாக்களித்துள்ளனர். தேர்தலில் எனக்கு வாக்களித்த மக்களுக்கு நன்றி. தேர்தலில் அளித்த வாக்குறுதியின்படி விவசாயக் கடன்களைத் தள்ளுபடி செய்துள்ளேன். விரைவில் விவசாயக் கடன் ரத்துக்கான ஆணை வெளியிடப்படும்" என்று குறிப்பிட்டார். "அதிகாரத்தைக் கைப்பற்ற காங்கிரஸ், மஜத கட்சிகள் நாடகமாடுகின்றன. நான் 5 ஆண்டுகள் முழுமையாக ஆட்சி செய்வேன்" என்றும் நம்பிக்கை தெரிவித்தார். நம்பிக்கை வாக்கெடுப்பு குறித்த கேள்விக்கு, நாளை அல்லது நாளை மறுநாள் வரை பொறுத்திருங்கள் என்று பதில் தெரிவித்தார்.

எடியூரப்பா தற்போது மூன்றாவது முறையாகக் கர்நாடக முதல்வராக பொறுப்பேற்றுள்ளார். கடந்த 2007ஆம் ஆண்டு சில நாட்கள் முதல்வராக இருந்த அவர், 2008ஆம் ஆண்டு தேர்தலில் வெற்றி பெற்று இரண்டாவது முறையாக முதல்வராகப் பதவியேற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

தொடரும் போராட்டங்கள்

எடியூரப்பா பதவியேற்ற நிலையில், ஈகிள்டன் விடுதியில் தங்கவைக்கப்பட்டிருந்த காங்கிரஸ், மஜத எம்.எல்.ஏ.க்கள் கர்நாடக சட்டப்பேரவை அமைந்துள்ள விதான் சவுதானுக்கு வருகை தனது அங்குள்ள காந்தி சிலை அருகே தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். சரியாக 10.30 மணியளவில் அங்கு வந்த காங்கிரஸ் மூத்த தலைவர் குலாம்நபி ஆசாத், சித்தராமையா, மல்லிகார்ஜுன கார்கே, அசோக் கெலாட், முன்னாள் பிரதமர் தேவ கவுடா, குமாரசாமி ஆகியோரும் தர்ணாவில் ஈடுபட்டுவருகின்றனர்.

செய்தியாளர்களைச் சந்தித்த சித்தராமையா, "பதவியேற்புக்குத் தடை கேட்ட வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. இதனை நாங்கள் மக்கள் மன்றத்துக்குக் கொண்டுசெல்வோம். பாஜக எவ்வாறு அரசியல் சாசனத்துக்கு எதிராகச் செயல்படுகிறது என்பதை மக்களிடம் எடுத்துச் சொல்வோம்" என்று கூறியுள்ளார்.

காங்கிரஸ் எம்.பி டி.கே. சுரேஷ் கூறுகையில், "ஆனந்த் சிங்கைத் தவிர அனைத்து எம்.எல்.ஏ.க்களும் எங்களுடன்தான் உள்ளனர். ஆனந்த் சிங் தற்போது மோடியின் பிடியில் உள்ளார்" என்று குற்றம் சாட்டினார்.

சட்டப்பேரவை வளாகத்தில் காங்கிரஸ், மஜத எம்.எல்.ஏக்களின் தர்ணா போராட்டம் 12.15 அளவில் நிறைவடைந்தது. போராட்டத்தில் ஈடுபட்டிருந்த எம்.எல்.ஏக்கள் கலைந்து பேருந்துகள், கார்களில் ஈகிள்டன் விடுதியை நோக்கிப் புறப்பட்டனர்.

எடியூரப்பா பதவியேற்பைக் கண்டித்து பெங்களூரு தொடங்கி கர்நாடகம் முழுவதும் காங்கிரஸ், மஜதவினர் போராட்டங்களில் ஈடுபட்டுவருகின்றனர். இதனால் மாநிலம் முழுவதும் காவல் துறை பாதுகாப்பைப் பலப்படுத்தியுள்ளது. நீதி கிடைக்காவிட்டால் தொடர் போராட்டங்கள் நடத்தப்படும் என்று இரு கட்சிகளும் அறிவித்துள்ளன.

ராகுல்- அமித் ஷா மோதல்! அரசியல் சாசனத்தை பாஜக ஏளனம் செய்கிறது என்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி இன்று (மே 17) வைத்த குற்றச்சாட்டுக்கு, ‘ஜனநாயகத்தைக் கொலை செய்த கட்சி காங்கிரஸ்’ என்று பாஜக


அரசியல் சாசனத்தை பாஜக ஏளனம் செய்கிறது என்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி இன்று (மே 17) வைத்த குற்றச்சாட்டுக்கு, ‘ஜனநாயகத்தைக் கொலை செய்த கட்சி காங்கிரஸ்’ என்று பாஜக தலைவர் அமித் ஷா பதில் அளித்துள்ளார்.

இன்று காலை அவசர அவசரமாக பிரதமர் மோடி, பாஜக தலைவர் அமித் ஷா ஆகியோர் கூட வராமல் பெங்களூருவில் உள்ள விதான் சௌதாவில் கர்நாடக முதல்வராக எடியூரப்பா பதவியேற்றுக் கொண்டார்.

தனிப் பெரும் கட்சியாக இருந்தாலும் பெரும்பான்மை இல்லாத நிலையில் பாஜகவை ஆட்சி அமைக்க ஆளுநர் அழைக்க, அதற்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடுக்கப்பட்டது. அவ்வழக்கில் எடியூரப்பா முதல்வராக பதவி ஏற்க தடை விதிக்க உச்ச நீதிமன்றம் மறுத்துவிட்டது. இந்நிலையில்தான் இன்று காலை முதல்வராக பதவியேற்றுக் கொண்டார் எடியூரப்பா.

இதுபற்றி காங்கிரஸ் கட்சித் தலைவரும் பாஜக தலைவர் அமித் ஷாவும் ட்விட்டரில் பரஸ்பரம் கடுமையாக மோதிக் கொண்டிருக்கிறார்கள்.

இதுபற்றி இன்று காலை ட்விட்டரில் கருத்து வெளியிட்ட ராகுல் காந்தி, ‘’கர்நாடகாவில் பெரும்பான்மை இல்லாத நிலையிலும் ஆட்சி அமைக்கிற பாஜகவின் செயல்பாடு என்பது முரட்டுத் தனமான நடவடிக்கை. இது அரசியல் சாசனத்தைப் பரிகாசம் செய்யும் செயல்’’ என்று கடுமையாகச் சாடியிருந்தார்.

மேலும், ‘’இன்று பாஜக தனது வெற்று வெற்றியைக் கொண்டாடுகிறது. இந்தியாவோ தன் ஜனநாயகம் தோல்வி அடைந்ததற்காக துக்கம் அனுசரிக்கிறது’’ என்று கூறியிருக்கிறார் ராகுல் காந்தி.

ராகுல்காந்தியின் இந்தத் தாக்குதலுக்கு ட்விட்டரிலேயே பதில் கொடுத்திருக்கிறார் பாஜக தலைவர் அமித் ஷா.

“கர்நாடக தேர்தல் முடிவுகளுக்குப் பின் எந்த நிமிடத்தில் காங்கிரஸும் மதச்சார்பற்ற ஜனதா தளமும் சந்தர்ப்ப வாதத்துக்காக கை கோர்த்தனவோ, அந்த நிமிடத்தில்தான் ஜனநாயகம் கொல்லப்பட்டது. மேலும் காங்கிரசின் இன்றைய தலைவர் தனது கட்சியின் பெருமை மிகு வரலாறுகளை அறியாதவர் போலும்.

எமர்ஜென்சியைக் கொண்டுவந்தது, பல மாநில ஆட்சிகளை 356 சட்டப் பிரிவு மூலம் கலைத்தது, நீதிமன்றங்களையும் ஊடகங்களையும் சீரழித்தது, பொது சமூகத்தைக் கெடுத்தது என்ற வரலாறு கொண்டது காங்கிரஸ்’’ என்று கூறியிருக்கிறார் அமித் ஷா.


முன்னணி நடிகர்களுடன் ஜோடி சேர்ந்து நடித்துவருவதோடு, கதாநாயகிக்கு முக்கியத்துவம் உள்ள படங்களையும் தேர்வு செய்து நடித்துவருகிறார் நயன்தாரா. அந்த வரிசையில் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் கதையின் நாயகியாக நயன்தாரா நடித்துவரும் படம் ‘கோலமாவு கோகிலா’. பாடலில் புதுமை நிகழ்த்திப் படத்திற்கான எதிர்பார்ப்பை அதிகரிக்கச் செய்துவருகிறார் அனிருத்.

‘எதுவரையோ’ பாடலை விவேக், கௌதம் மேனன் ஆகிய இருவரையும் இணைந்து எழுதவைத்த அனிருத், கல்யாண வயசு என்கிற இந்தப் பாடலை சிவகார்த்திகேயனை எழுதவைத்து பாடலாசிரியராக அறிமுகம் செய்திருக்கிறார். ‘கல்யாண வயசு’ என்ற இந்தப் பாடலின் டீசர் முன்பு வெளியானது.

அதில் யோகி பாபு, “வீட்டுக்குப் போனா யாரையாவது கல்யாணம் பண்ணிக்கச் சொல்ற அப்பா. அத்தைப் பொண்ணைத்தான் கல்யாணம் பண்ணனும்னு சொல்ற அம்மா. பேரக்குழந்தைகளை பார்க்கணும்னு சொல்ற பாட்டி. இந்த டார்ச்சர் எல்லாம் தாங்க முடியாம கடைக்கு வந்தா, என்னையே ஏக்கமாக பார்க்கிற பொண்ணுங்க. ஆனா அவங்க எல்லார்கிட்டயும் ஒரே ஒரு பதில்தான் சொன்னேன். கட்டுனா அந்த பொண்ணைத்தான் கல்யாணம் பண்ணி கைப்பிடிப்பேன்னே. இதுவரைக்கும் அந்தப் பொண்ண யார்கிட்டயும் சொல்லல, முதன் முறையாக உங்ககிட்ட சொல்றேன்” என நயன்தாராவிடம் பேசும் காட்சிகள் இடம்பெற்றிருந்தன. இதன் காரணமாக ஆண்களின் காதல் கைகூடுவதற்கு உதவி செய்யும் விதமாக நயன்தாரா நடித்திருப்பார் என யூகம் எழுந்தது.

இந்த நிலையில் தற்போது வெளியாகியிருக்கும் கல்யாண வயசு வீடியோ பாடலில் யோகி பாபு நயன்தாராவைத்தான் காதலிப்பதாகச் சொல்லி, ஒரு பெண்ணைக் கவர்வதற்கு ஆண் என்னவெல்லாமோ செய்வானோ அதையெல்லாம் நயன்தாராவைக் கவர்வதற்குச் செய்யும் காட்சிகள் இடம்பெற்றிருக்கின்றன.

நயன்தாராவைக் கவர்வதற்கு யோகி பாபு செய்யும் காட்சிகள் நகைச்சுவையாக இருக்கின்றன. சிவகார்த்திகேயன் இந்தப் பாடலுக்கு எளிமையான வார்த்தைகளைப் பயன்படுத்தியிருக்கிறார்.

கல்யாண வயசு வீடியோ பாடல்


இரவு 12.00

இரவு 12 மணிக்கு தலைமை நீதிபதி தீபம் மிஸ்ராவின் வீட்டு வாசலில் போலீஸார் குவிக்கப்பட்டனர். பேரி கார்டுகளால் அவர் வீட்டைச் சுற்றித் தடுப்புகள் அமைக்கப்பட்டன. எனவே இரவே இந்த வழக்கை விசாரிக்க இருக்கிறார் என்பது உறுதியாகி அனைத்து முக்கிய ஊடகங்களும் தீபம் மிஸ்ராவின் வீட்டு வாசலில் குவிந்தன.

இரவு 12.30

உச்ச நீதிமன்றப் பதிவாளர் காங்கிரஸ்- மஜத தலைவர்களின் அவசர மனுவை கையோடு எடுத்துக் கொண்டு உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி தீபக் மிஸ்ராவின் வீட்டுக்கு விரைந்தார். 12.30 மணியளவில் அவர் தலைமை நீதிபதியின் வீட்டை அடைந்தார். கர்நாடக காங்கிரஸ் தலைவர் பரமேஸ்வரன், மதச்சார்பற்ற ஜனதா தள தலைவர் குமாரசாமி ஆகியோர் தாக்கல் செய்த மனுவைதான் அவர் தீபக் மிஸ்ரா வீட்டுக்கு எடுத்து வந்திருந்தார். அரசியல் அமைப்புச் சட்டம் 14-ன்படி ஆளுநர் எடியூரப்பாவை முதல்வர் பதவி ஏற்க அழைத்தது சட்டத்துக்கு முரணான செயல் என்பது உள்ளிட்ட விரிவான மனுவாக அது இருந்தது.

இரவு 1.45- உச்ச நீதிமன்றத்தில் விசாரணை!

தலைமை நீதிபதி தீபக் மிஸ்ராவின் வீட்டில் சுமார் அரைமணி நேரம் நடந்த ஆலோசனைக்குப் பின் இரவு 1.15 மணி வாக்கில் இம்மனுவை ஏற்றதாக அறிவித்தது உச்ச நீதிமன்றம். அதன்படி உச்ச நீதிமன்றத்தில் இரவு 1.45 மணிக்கு இந்த வழக்கு விசாரணைக்கு வரும் என்றும் நீதிபதி ஏ.கே. சிக்ரி, அசோக் பூஷன், காப்டே ஆகிய மூன்று நீதிபதிகள் கொண்ட அமர்வு இந்த வழக்கை விசாரிக்கும் என்று அறிவிக்கப்பட்டது.

உச்ச நீதிமன்றத்தில் குவிந்த வழக்கறிஞர்கள்!

இந்த அறிவிப்பை எடுத்து உச்ச நீதிமன்றத்தில் ஊடகத்தினரும் வழக்கறிஞர்களும் குவிந்தனர். காங்கிரஸ், மஜத சார்பில் மூத்த உச்ச நீதிமன்ற வழக்கறிஞர் அபிஷேக் சிங்வி இரவு ஒன்றரை மணிக்கு உச்ச நீதிமன்றத்துக்கு வந்தார். அரசு சார்பாக முன்னாள் அட்டர்னி ஜெனரல் முகுல் ரோத்தகி, அட்டர்னி ஜெனரல் கே.கே.வேணுகோபால் ஆகியோர் நீதிமன்றத்துக்கு வந்தனர்.

இரவு 2 மணி: விசாரணை தொடங்கியது

இரவு 2 மணி வாக்கில் இந்த மனுவின் மீதான விசாரணை தொடங்கியது. “தேர்தலுக்குப் பின் அமைக்கப்பட்ட கூட்டணியான காங்கிரஸ் - மஜத கட்சிகளின் கூட்டணிக்கு பெரும்பான்மை இருக்கும் நிலையில், பெரும்பான்மை இல்லாத தனிப்பெரும் கட்சியான பாஜகவை ஆட்சி அமைக்க ஆளுநர் அழைத்தது தவறு. ஆளுநரின் அழைப்பை உச்ச நீதிமன்றம் ரத்து செய்ய வேண்டும். தேர்தலுக்குப் பிறகான கூட்டணிகள் ஆட்சி அமைக்க அழைக்கப்பட்டது என்பது கோவா, மணிப்பூர், உபி, ஜார்க்கண்ட், டெல்லி என்று பல மாநிலங்களில் இதற்கு முன் நடந்துள்ளது. மேலும் மெஜாரிட்டியே இல்லாத பாஜகவை ஆட்சி அமைக்க அழைத்து 15 நாட்கள் அவகாசமும் கொடுத்துள்ளதன் மூலம் ஆளுநர் பெரிய தவறு செய்திருக்கிறார்.

சர்க்காரியா கமிஷனின் வழிகாட்டு நெறிமுறைகளின்படி ஆளுநர் செயல்படவில்லை.எனவே ஆளுநர் எடியூரப்பாவுக்கு விடுத்த அழைப்பை ரத்து செய்ய வேண்டும். மேலும் காங்கிரஸ் - மஜத கூட்டணியை ஆட்சி அமைக்க அழைக்குமாறு அவருக்கு அறிவுறுத்த வேண்டும்’’ என்று வாதிட்டார்.

மேலும், ‘’ஆளுநரின் இந்த அழைப்பு மற்றும்15 நாள் அவகாசம் மூலம் குதிரை பேரத்துக்கு வழி தொடங்கிவிட்டது. அது குதிரை வியாபாரம் அல்ல. குதிரை வியாபாரம் என்று சொல்லி குதிரைகளை அவமதிக்க விரும்பவில்லை. இது மனித வியாபாரம். கர்நாடகாவில் ஆளுநரின் உத்தரவால் மனித வியாபாரம் நடக்கிறது. இதைத் தடுக்க வேண்டும்’’ என்றார்.

மத்திய அரசு சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் முகுல் ரோத்தகி இதற்கு பதில் அளித்து வாதாடுகையில், “ஆளுநரின் உத்தரவை மாற்றி அமைக்க நீதிமன்றத்துக்கு அதிகாரம் இல்லை’’ என்றார்.

ஆனால் குறுக்கிட்ட அபிஷேக் சிங்வி, ‘’எத்தனையோ வழக்குகளில் ஆளுநர்கள் விதித்த 356 உத்தரவுகளே திருத்தப்பட்டுள்ளன’’ என்று பதில் அளித்தார்.

மேலும், “இரவு 2 மணிக்கு உச்ச நீதிமன்றத்தின் மூன்று நீதிபதிகள் அமர்ந்து இந்த வழக்கை விசாரிப்பதில் இருந்தே இந்த விஷயத்தின் தீவிரத் தன்மை புரிகிறது. இந்த விசாரணை என்பது ஜனநாயகத்துக்குக் கிடைத்த வெற்றி.

இந்த விசாரணை முடியும் வரை பதவியேற்பை தள்ளி வைக்க வேண்டும். பதவியேற்பு நிகழ்வை நாளைக்கு (மே 18)க்கு தள்ளி வைக்க வேண்டும்’’ என்று வாதங்களை வைத்தார்.

நீதிபதிகள் கேள்வி!

மத்திய அரசின் சார்பில் ஆஜரான வழக்கறிஞர்கள் முகுல் ரோத்தகி, கே.கே.வேணுகோபால் ஆகியோரைப் பார்த்து நீதிபதி ஏகே சிக்ரி ‘’குமாரசாமி தனக்கான 117 எம்.எல்.ஏ.க்கள் ஆதரவுப் பட்டியலை ஆளுநரிடம் கொடுத்திருக்கும்போது, எடியூரப்பா பின் எவ்வாறு மெஜாரிட்டியான 112 எம்.எல்.ஏ.க்களின் ஆதரவு இருப்பதாக சொல்ல முடியும்?’’என்று கேட்க, ‘அதை சட்டமன்றத்தில்தான் சொல்ல முடியும்’’ என்று பதிலளித்தது மத்திய அரசுத் தரப்பு.

முகுல் ரோத்தகி வாதங்கள்:

இந்த வழக்கு நள்ளிரவில் விசாரிக்க்கப்பட வேண்டிய வழக்கே அல்ல. உறங்கிக் கொண்டிருந்த என்னை நள்ளிரவில் எழுப்பிக் கொண்டு வந்துவிட்டார்கள். குடியரசுத் தலைவர், ஆளுநர்களின் ஆணைகளை உச்ச நீதிமன்றம் உடனடியாக திருத்தவோ ரத்து செய்யவோ முடியாது. எனவே இந்த வழக்கை இப்போது விசாரணைக்கு எடுத்துக் கொண்டதே தவறு. அரசியல் அமைப்புச் சட்டம் 164-ன்படி ஆளுநர் அதன் அரசியல் சாசன கடமையை செய்வதை யாரும் தடுக்க முடியாது என்றார் ரோத்தகி.

அதிகாலை 4.25 தீர்ப்பு

இரு தரப்பின் வாதங்களைக் கேட்ட நீதிபதிகள், ‘’கர்நாடக ஆளுநர் முதல்வராக பதவியேற்குமாறு எடியூர்ப்பாவுக்கு விடுத்த அழைப்பை ரத்த் செய்ய முடியாது. ஆனாலும் இந்த மனுவை நாங்கள் தள்ளுபடி செய்யவில்லை. பிறகு விசாரிப்போம்’’என்று கூறி வழக்கு விசாரணையை முடித்தனர்.

அதனால் இன்று காலை எடியூரப்பா கர்நாடக முதல்வராக பதவி ஏற்பது உறுதியாகிவிட்டது. இதையடுத்து பெங்களூருவில் பதற்றம் பரவி வருகிறது.

Wednesday, May 16, 2018

ஊதிய முரண்பாட்டைச் சரி செய்வதற்காக, தமிழகத்தில் உள்ள ஏராளமான கீழ்நிலைக் காவலர்கள் தமிழக அரசு அமைத்துள்ள ஒரு நபர் ஆணையத்துக்கு மனுக்களை அனுப்பியுள்ளனர்.

ஆறாவது ஊதியக் குழு பரிந்துரைகள் அமல்படுத்தப்பட்டபோதே பல்வேறு பணி நிலைகளில் ஊதிய முரண்பாடுகள் இருப்பதாகவும் அவற்றைக் களைய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அரசு ஊழியர் சங்கங்கள் கோரிக்கை விடுத்தன.

இதையடுத்து, தமிழக அரசு ஊழியர்களின் ஊதிய முரண்பாட்டைக் களைய அரசு செலவினச் செயலாளர் சித்திக் தலைமையில் ஒரு நபர் ஆணையம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த ஆணையத்துக்கு ஏராளமான கீழ்நிலைக் காவலர்கள் மின்னஞ்சல் மற்றும் தபால் மூலம் மனுக்களை அனுப்பியுள்ளனர்.

அதில், “1960ஆம் ஆண்டுகளில் ஆசிரியர்களுக்கு இணையாக இருந்த தங்களது ஊதியம் தற்போது மிகவும் குறைந்துள்ளது. அதாவது ஊதியம் வழங்குவது முரண்பட்டுள்ளது. ஞாயிற்றுக்கிழமைகளில் வேலை பார்த்தால் வழங்கப்படும் ஊதியம் ஒருநாள் ஊதியத்தைவிடக் குறைவாக இருக்கிறது. மேலும் மருத்துவச் சலுகைகள், போக்குவரத்துப் படி ஆகியவற்றை உயர்த்த வேண்டும், பண்டிகை நாள்களில் விடுப்பும் தர வேண்டும்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

சமீப காலமாக, ஊதிய முரண்பாடு,CPS ரத்து போன்ற கோரிக்கைக்காக போராடிய ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள்  தலைமை செயலக முற்றுகை போராட்டத்தின் போது ஆசிரியர்களை வீடு புகுந்து கைது செய்தும் வாகனங்களை பறித்துக்கொண்டு நடுவழியில் இறக்கிவிட்டதும்,முள்வேலி தடுப்புகள் அமைத்து தீவிரவாதிகள் போல் சித்தரித்து அடக்குமுறையை கையாண்ட காவல்துறை நண்பர்கள் ஆசிரியர்களை ஒப்பிட்டு ஊதிய உயர்வு கேட்பது நகைப்புக்குறியதாகிறது.

 அரசு ஊழியர்கள் ஆசிரியர்களின் வாழ்வாதார போராட்டத்தை இரும்புகரம் கொண்டு நசுக்கியதன் விளைவாக இன்று பல காவலர்கள் மனு எழுதிக்கொண்டே இருக்கிறார்கள்.

சமீபகாலமாக பணிச்சுமை, மன அழுத்தம் காரணமாக காவலர்கள் தற்கொலை செய்துகொள்வது அதிகரித்துவருவது குறிப்பிடத்தக்கது.