இந்த மனு மீதான விசாரணை சுமார் இரண்டரை மணிநேரம் நீடித்தது. இந்த வழக்கில் மத்திய அரசு சார்பாக துஷர் மேத்தா, முகுல் ரோத்தகி, கே.கே.வேணுகோபால் ஆகிய 3 வழக்கறிஞர்கள் ஆஜராகி வாதிட்டனர். மனுதாரர்கள் சார்பில் அபிஷேக் சிங்வி வாதிட்டார். உச்சநீதிமன்ற அறை எண் 6ல் விசாரணை நடைபெற்றது. இரண்டரை மணிநேரமாக நடைபெற்ற காரசார வாதங்களுக்கு பிறகு எடியூரப்பா பதவியேற்பதற்கு தடை விதிக்க முடியாது என உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்தது.
*15 நாட்களில் மாற்றமில்லை*
15 நாட்களில் பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும் என்ற ஆளுநரின் உத்தரவில் மாற்றமில்லை என உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது. முன்னதாக 15 நாட்களை 2 நாட்களாக குறைக்கக்கோரி காங்கிரஸ்-ம.ஜ.த சார்பில் வழக்கறிஞர் அபிஷேக் சிங்வி வாதிட்டது குறிப்பிடத்தக்கது.
*பதவியேற்பை ஒத்திவைக்க கோரிக்கை*
பதவியேற்பை மாலை 4.30 மணிக்கு ஒத்திவைக்க வேண்டும் என அபிஷேக் சிங்வி உச்சநீதிமன்றத்தில் கோரிக்கை விடுத்துள்ளார். பதவியேற்பை தள்ளிவைத்து, ஆதரவளிக்கும் எம்எல்ஏக்களின் பட்டியலை அளிக்க உத்தரவிட வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
No comments:
Post a Comment