ஜப்பானைச் சேர்ந்த பேனசோனிக் நிறுவனம் இந்திய மக்கள் மத்தியில் பிரபலமானது. இந்தியச் சந்தையில் புதிய வரவான ரெட்மீ, கூல்பேட் போன்ற நிறுவனங்கள் குறைந்த விலை போன்களை அறிமுகப்படுத்தி அதில் பெரிய வெற்றியும் பெற்றுள்ளன. அவர்களைப் போன்றே பேனசோனிக் நிறுவனமும் தன்னுடைய பட்ஜெட் போனான பேனசோனிக் P95 என்ற புதிய ஸ்மார்ட் போனை இந்தியாவில் அறிமுகப்படுத்தியுள்ளது.
இதனை பிக் ஷாப்பிங் நாட்கள் என்று அழைக்கப்படும் மே 13ஆம் தேதி முதல் மே 16ஆம் தேதி வரை ப்ளிப்கார்டில் பெற்றுக்கொள்ளலாம். மேலும் இதன் விலை 3,999 ரூபாயாகும். இது நீலம், தங்கம் மற்றும் அடர்ந்த சாம்பல் நிறங்களில் கிடைக்கவுள்ளது.
“புதிய பேனசோனிக் P95 போன் உயர்ந்த வடிவமைப்பு மற்றும் செயல்திறன் ஆகியவற்றின் கலவையாகும். மேலும் இதன் விலை அனைவரையும் கவரும் என நாங்கள் எதிர்பார்க்கிறோம்” என்று பேனசோனிக் இந்திய வணிகத் தலைவர் பங்கஜ் ரானா கூறியுள்ளார்.
பேனசோனிக் P95, 5 இன்ச் எச்டி டிஸ்ப்ளே மற்றும் 1.3GHz குவாட் கோர் குவால்காம் ஸ்னாப்டிராகன் கொண்டு இயங்கக்கூடியது. மேலும் இந்த ஸ்மார்ட்போனில் 1 ஜிபி ரேம் மற்றும் 16 ஜிபி ஸ்டோரேஜ், மேலும் மைக்ரோ SD கார்டு வழியாக 128 ஜிபி வரை சேமிப்புத் திறன் கொண்டது.
கேமராவைப் பொறுத்தவரை 5 மெகா பிக்செல் முன் கேமராவும், 8 மெகா பிக்செல் எல்.இ.டி பிளாஷுடன் பின் கேமராவும் கொண்டுள்ளது. எப்போதும் குறைந்த விலை போன்களின் கேமரா பெரிதும் கவராது. ஆனால் இதில் ஜீரோ ஷுட்டெர் லாக் கொண்டுள்ளது.
இதன் மூலம் எந்த விதமான தாமதமுமின்றி படங்களை எடுக்கலாம். சுவாரஸ்யமாக, இந்த ஸ்மார்ட்போன் முகம் மற்றும் குரல் ஆகியவற்றைக் கண்டுபிடித்து இயங்கும் அம்சங்களும் பெற்றுள்ளது. இப்படி வியக்கவைக்கும் அம்சங்களைக் கொண்ட இந்த ஸ்மார்ட் போன் நிச்சயம் வாடிக்கையாளர்களைக் கவரும் என்பதில் சந்தேகம் இல்லை.
No comments:
Post a Comment