வழக்குலம் அன்னாசிப் பழங்களுக்கு புவிசார் குறியீடு கிடைத்துள்ளது.
கேரள மாநிலத்தின் கொச்சிக்கு அருகிலுள்ள சிறிய நகரம் வழக்குலம். இந்த நகரம் அன்னாசிப் பழ உற்பத்திக்குப் புகழ்பெற்றது. அன்னாசி நகரம் என்றே இந்நகரம் அழைக்கப்படுகிறது. இந்தியாவின் அன்னாசிப் பழ உற்பத்தி மையமாகவும் வழக்குலம் உள்ளது. இங்கு உற்பத்தி செய்யப்படும் 80 விழுக்காடு அன்னாசிப் பழங்கள் நாட்டின் பிற பகுதிகளுக்கும் எடுத்துச் செல்லப்பட்டு விற்பனை செய்யப்படுகிறது. ஆண்டுக்கு 200 முதல் 250 கோடி ரூபாய் மதிப்பிலான அன்னாசிப் பழங்கள் இங்கு உற்பத்தி செய்யப்படுகின்றன.
1940ஆம் ஆண்டு முதல் இப்பகுதியில் அன்னாசி சாகுபடி செய்யப்பட்டு வருகிறது. அன்னாசி உற்பத்திக்கு ஏதுவான பருவ சூழல் நிலவுவதால் பலரும் சாகுபடி செய்யத் தொடங்கினர். இதையடுத்து இப்பகுதிகளில் அன்னாசி உற்பத்தி வேகமாக அதிகரித்தது. இதனால் இப்பகுதியில் அன்னாசிப் பழத்திலிருந்து பழச்சாறு தயாரிக்கும் நிறுவனங்களும் வரத் தொடங்கின. 2000ஆம் ஆண்டிற்கு முன்பே அன்னாசிப் பழ ஆராய்ச்சி நிறுவனமும் இப்பகுதியில் அமைக்கப்பட்டது.
இந்த ஆராய்ச்சி நிலையம் அன்னாசிப் பழ உற்பத்தியில் புதிய மேலாண்மைப் பயிற்சிகளையும், தொழில்நுட்பங்களையும் அளித்துவருகிறது. இந்நிலையில் தற்போது இங்கு உற்பத்தியாகும் அன்னாசிப் பழங்களுக்குப் புவிசார் குறியீடு கிடைத்துள்ளது. இதனால் இப்பகுதி விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். சர்வதேச அளவில் அன்னாசிப் பழ உற்பத்தியில் தாய்லாந்து முதலிடத்தில் உள்ளது. இந்தியா ஐந்தாவது இடத்தில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
.
No comments:
Post a Comment